15 February 2011

தெய்வீகப் பொன்மொழிகள் - 66


மௌனம் என்பது கடவுளை வணங்குவதற்கு ஒரு முக்கியமான முறை.  மௌனம் என்றால் பேசாமலிருப்பது மைடுமல்ல.  மனதை எண்ணமற்ற நிலையில் வைத்துக் கொள்ளும் ஒரு செயல்முறை.  எலலாப்
புலன்களையும் நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு எந்த ஒரு அங்கமும் தானாகவேகூட அசையாமல் இருக்கவேண்டும்.  அத்தகைய மௌனம் நம் ஒவ்வொருவரின் இதயத்தில் இருக்கும் தெய்வீகமான பொறி இயங்கி பரமாத்மாவை நாம் அனுபவிக்க உதவும்.


பலவிதமான வழிபாட்டு முறைகளிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடம் என்னவென்றால், நம்முடைய க்ஷேமத்தின் பொறுப்பைக் கடவுளிடம் விட்டுவிட்டு நம்முடைய கடமையை நாம் செய்யவேண்டும்.  இது
செயலின்மைக்கோ அல்லது சோம்பேறித்தனமாக இருப்பதற்கோ ஆன தத்துவம் அல்ல.  நம்முடைய பணிகளை கடவுளுக்கு அர்ப்பணம் செய்து செயல் படுத்துவதற்கான தத்துவம்.

No comments:

Related Posts with Thumbnails