15 February 2011

தெய்வீகப் பொன்மொழிகள் - 65



நவீன விஞ்ஞான கருத்துக்கள் ஸ்ரீசங்கரரின் எல்லாமே இரு நிலையற்ற ஒன்றேதான் என்ற தத்துவத்திற்கு நெருங்கி வருகின்றன.  இத்தகைய நவீன கருத்துக்கள் உலகில் சமாதானத்தைப் பற்றிய உணர்வு ஏற்பட வழிகோலும் உள்ளது ஒன்றுதான் என்ற தத்துவம் நன்றாக உணரப்பட்டு உலக மக்கள் அனைவரும் ஒரே ஆண்டவனின் ரூபங்கள் என்று அறிந்துவிட்டால் வித்தியாச மனப்பான்மை மறைந்துவிடும்.

ஒரு எதிரி நாடானாலும், அதிலுள்ள மக்களும் நாமும் ஒன்றே என்ற உணர்வு ஏற்படும்.  அவர்களுக்கு நேரும் துன்பம் தங்களுடையதே என்ற எண்ணம் எழுந்து உலக சமாதானத்தை நிலைநிறுத்த அஸ்திவாரம் போலாகும்.

No comments:

Related Posts with Thumbnails