15 February 2011

தெய்வீகப் பொன்மொழிகள் - 63



நடமாடும் தெய்வம்
நாம் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளபோது காலத்திலோ, தூரத்திலோ நம்மிடமிருந்து பிரிந்திருப்பவர்களின் கவலைகள் நம்மை பாதிப்பதில்லை.  நம்முடைய சென்ற கால துக்கங்களும் பின்நோக்கில் அவ்வளவு கடுமையாகத் தெரிவதில்லை.  நம்முடைய விழிப்பு நிலையிலும், நம்முடைய கவலைகளும், துக்கங்களும் நம்மை பாதிக்காமலிருக்க பழகிக்கொள்ள வேண்டும்.  இன்பமோ, துன்பமோ நம்மை பாதிக்காமல் நம்முடைய கடமையைச் செய்ய வேண்டுமென்பதே உபநிஷத்துகள் கற்பிக்கும் பாடமாகும்.  தவத்தின் மூலமே இத்திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

No comments:

Related Posts with Thumbnails