03 April 2012

தெய்வீகப் பொன்மொழிகள் - 92






கடவுள் நமக்கு அருள் புரிந்து நம்மைத் தம்மிடம் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் அவருக்கும், உலகத்துக்கும் செய்யவேண்டிய 
கடமைகளைத் தவறாமல் செய்யவேண்டும்.  இவைதான் நம்முடைய தருமம்.  நாம் செய்யும் காரியங்கள் இம்மைக்கும், மறுமைக்கும் பயன் 
அளிப்பவையாக இருந்தால் அது தருமம் எனப்படும்.  மறைந்தபின் உய்வு பெற தரும வழிகளிலான கடமைகளைச் செய்ய வேண்டும்.  
மற்றவர்களின் நலனுக்காக் நாம் இன்ஸ்யூரன்ஸ் சேய்வதைவிட இது முக்கியமானது.  தரும காரியங்கள் அவைகளைச் செய்பவரின் 
மறுமை நலனுக்கு இன்ஸ்யூரன்ஸ் போலாகும்.  

தெய்வீகப் பொன்மொழிகள் - 91





ஒரு பிரயாணி ஸ்டேஷனில் வந்து இறங்கியதும் குதிரை வண்டிக்காரர்களும், ஆட்டோ ஓட்டுபவர்களும், டாக்ஸிக்காரர்களும் அவனை சூழ்ந்து கொள்கிறார்கள்.  அவன் தனக்கு எது வேண்டுமோ அதில் ஏறிக்கொண்டு தன்னுடைய இடத்தை அடைகிறான்.  வெவ்வேறு விதமான 
வண்டிக்காரர்கள் சவாரிக்காக போட்டியிடுவதை ஒரு குற்றமாக கருத முடியாது.  அது அவர்களுடைய ஜீவனம்.  ஆனால், வெவ்வேறு மதங்களைக் கைப்டிப்பவர்கள் போட்டியிட்டுக்கொண்டு ஒருவரைத் தங்கள் மதத்தின் மூலமே உய்விக்க முடியுமென்று முயற்சிப்பது அர்த்தமற்றது.  

Related Posts with Thumbnails