15 February 2011

தெய்வீகப் பொன்மொழிகள் - 64

ஜகத்குரு

சமீபகாலம் வரை, ஜடப்பொருள் வெவ்வேறு குணங்களுடைய மூலப்பொருள்களால் ஆனவை என்று கருத்தைக் கொண்டிருந்தனர்.  இப்போது, தனிப்பட்ட மூலப்பொருள்களுக்கிடையே வித்தியாசமில்லை
என்றும் எல்லாம் ஒரு சக்தியிலிருந்து உண்டானவை என்றும் சொல்கிறார்கள்.  


ஆகவே, நவீன விஞ்ஞானிகள் வித்தியாசம் என்ற கருத்திலிருந்து எல்லாமே ஒன்று என்ற கருத்தை ஒப்புக்கொள்கிறார்கள்.  குறிப்பாக, ஐன்ஸ்டீன், ஸர் ஜேம்ஸ் ஜீன்ஸ், எடிங்டன் முதலானோர், ஸ்ரீ சங்கர பகவத்
பாதர்களின் அத்வைத சித்தாந்தத்திற்கு நெருக்கமாக வருகிறார்கள்.  நாம் காணும் பிரபஞ்சம் முழு உண்மையல்ல.  ஒரு தோற்றமே என்று கூறி இரண்டாகவும் பலவாகவும் தோன்றும் வித்தியாசங்களை
மறுக்கிறார்கள்.

No comments:

Related Posts with Thumbnails