18 February 2012

தெய்வீகப் பொன்மொழிகள் - 90




தற்கால வசதியான வாழ்க்கையை வேண்டுகிறோம்.  அதற்குப் பணம் தேவைப்படுகிறது.  நாம் எல்லோருமே செல்வந்தராகி விடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். நாம் நிம் மதியாகவும், பயமின்றியும் வாழ அது உதவுமா ?  ஒருவருக்கு எவ்வளவு செல்வங்கள் குவிந்தாலும், மற்றவரைவிட
அதிகம் வேண்டுமென்று விரும்புவதால், போட்டியும், சச்சரவும் உண்டாகின்றன.  மற்றவரைவிட அதிகம் பெறவிரும்புவது மனித இயல்பு.  ஒரு வஸ்து எல்லோருக்கும் ஒரு இடத்தில் வழங்கப்பட்டாலும் அதை முந்திப் பெறுவதற்கு போட்டி ஏற்படுகிறது.  இத்தகைய போட்டி மனப்பான்மை
நிலவும் வரை மனதில் திருப்தி எப்படி ஏற்படும் ?  பொருளாதார ரீதியிலான நன்மைகள் மட்டும் போட்டியைக் குறைத்துவிடாது.  போட்டி மனப்பான்மையை முற்றிலும் ஒழிக்க நம்மைத் தவிர நாம் அடையக்கூடிய மற்றொரு வஸ்து இல்லை என்ற ஞானத்தைப் பெறவேண்டும்.  அப்போதுதான் நிம்மதியாக வாழ முடியும்.

No comments:

Related Posts with Thumbnails