தெய்வீகப் பொன்மொழிகள் - 15
ஹிந்து மதஸ்தர்கள் மிகவும் பெருமைப்பட வேண்டிய அம்சம். இந்த மதம் ஒன்றுதான் தன்னை அனுசரிப்பதின் மூலமே ஒரு ஜீவன் உய்வு பெற முடியும் என்று ஒரு தனி உரிமை கொண்டாடிக் கொள்ளாமலிருப்பதேயாகும். யார் யார் எந்தெந்த சமய மார்க்கத்தில் சென்றாலும், முடிவில் ஒரே பரமாத்மாவிடம் வந்து சேருவார்கள் ஒப்புக் கொள்கிற விசால மனப்பான்மை[catholic outlook ] நம் சாஸ்திரங்களிலேயே காணப்படுகிறது. இதன் காரணமாகவே பிறரை இந்துவாக மதமாற்றம் செய்ய நம் சாஸ்திரங்கள் இடம் கொடுக்கவில்லை.
No comments:
Post a Comment