07 January 2011

தெய்வீகப் பொன்மொழிகள் - 52

ஜகத்குரு


சமய நூல்களில் கூறப்பட்டவைகளை உங்கள் கருத்துக்கேற்ப திரிக்காதீர்கள்.  அவைகளை சரியாகப் புரிந்து கொண்டு, பக்தி சிரத்தையுடனும், நம்பிக்கையுடனும் அதன்படி நடக்கவேண்டும்.  சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யுங்கள்.  முடிந்தவரை அல்ல, முழுமையாக சாஸ்திரத்தில் நமக்கு இடப்பட்டவைகள் நம்முடைய சித்தத்தை சுத்தப்படுத்தி பாபங்களைப் போக்கும்.  அவ்வாறு சுத்தப்படுத்தப்பட்ட இருதயத்தில் கடவுள் தோன்றி உயர்ந்த ஆன்மீக அனுபவத்திற்கு வழி காட்டுவார். அந்த நிலையை அடைந்துவிட்டால் எந்த விதமான வித்தியாசங்களும் இல்லை.  

No comments:

Related Posts with Thumbnails