26 October 2010

தெய்வீகப் பொன்மொழிகள் - 48



சத்தியத்தை சர்க்கரை பூசிய மாத்திரைகளாக்கித் தரவேண்டும்.  சர்க்கரை பூச்சுத்தான் மொத்தமே சர்க்கரையாகி விடக்கூடாது.  வெறும் இந்திரியங்களுக்கு மிகவும் ருசிக்கும் சமாசாரங்களில்தான் ஜனங்களுக்கு அதிக கவர்ச்சி இருக்கிறதென்று சொல்லிக்கொண்டே இவ்விதமே எழுதுவது சரியல்ல.  பத்திரிகையாளர்கள் முனைந்தால் தானாகவே ஜனங்களுக்கு நல்ல விஷயங்களில் ருசி பிறக்கும்.  நம்மையும் உயர்த்திக் கொண்டு, நம் வாசகர்களையும் உயர்த்த வேண்டும் என்கிற கடமை உணர்ச்சியைப் பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் பெறவேண்டும். 

No comments:

Related Posts with Thumbnails