இவ்வளவு விரிவான சடங்குகள் எதற்கு? மௌனப்பிரார்த்தனை போதாதா? என்ற கேள்வி எழலாம். சடங்குகளுடன் நிவேதனம் செய்வதின் உட்கருத்து என்னவென்றால் ஒரு பக்தன் எல்லாவற்றிற்கும் மூலமாக இருக்கும் ஒன்றையும் தான் அனுபவித்து இன்பம் பெறும் பொருள்களின் உள் தத்துவத்தையும் உணர்ந்து நன்றி செலுத்தும் வகையாக தான் அனுபவிக்கும் பொருள்களை முதலில் அந்த மூலத்திற்கு நிவேதனம் செய்கிறான். மிகவும் உயர்ந்தவைகளையும், மிகவும் பரிசுத்தமானவைகளையும் மட்டும்
ஆண்டவனுக்கு நிவேதனம் செய்ய வேண்டுமென்பதால் [நிவேதனம் செய்யப்படாத எதையும் அனுபவிக்கக்கூடாது].
இப்பழக்கம் ஒவ்வொருவரும் நிவேதனத்துக்கு உரியவைகளையே பெற்று அதன் மூலம் மகிழ்ச்சியடைய உதவும். நம்முடைய வாழ்க்கை பூர்ணமாகவும், பரிசுத்தமாகவும் அமைய இது மிகவும் உதவும்.