29 August 2010

தெய்வீகப் பொன்மொழிகள் - 42



சங்கர பகவத்பாதர்கள் பக்தியின் லக்ஷணத்தை சிவானந்த லஹரியில் இவ்வாறு வர்ணித்திருக்கிறார்:

 "அழிஞ்சில் விதை எப்படித் தாய் மரத்துடனேயே ஒட்டிக் கொள்கிறதோ, ஊசி எப்படி காந்தத்தால் கவரப் படுகிறதோ, பதிவிரதை எப்படி தன் பதியின்  நினைவிலேயே ஆழ்ந்திருக்கிறாளோ, கொடி எப்படி மரத்தைத் தழுவி வளர்கிறதோ, நதி எப்படி சமுத்திரத்தில் கலக்கிறதோ,  அப்படியே பசுபதியின் பாதாரவிந்தங்களில் எக்காலமும் மனத்தை அமிழ்த்தியிருப்பதுதான் பக்தி என்பது.

தெய்வீகப் பொன்மொழிகள் - 41



ஆஸ்பத்திரி வைத்து உடல் வியாதியை தீர்ப்பது மட்டும் போதாது.  நோயாளிகளது மனதில் கெட்ட எண்ண ங்கள் என்ற வியாதி
இல்லாமல் செய்வதே அதைவிட முக்கியம்.  இவ்வாறேதான் பள்ளிக்கூடங்கள் வைத்துப் படிப்பை விருத்தி செய்கிறோம்.  
படித்து வெளியில் வந்தவர்கள் யோக்கியர்களாக இல்லாவிட்டால்,  பள்ளிக்கூடம் வைத்து பயன் நமக்கு ஏது?  


 பக்தி, கட்டுப்பாடு, தியாகம் இவைகள் இல்லாமல் படிப்பால் வெறும் புத்தியை மட்டும் வளர்த்துக் கொண்டால் சாமர்த்தியமாக தவறுகள் செய்து  தப்பித்துக் கொள்வதற்கு வழியாகிறது.  அவன் நல்லவனாக இருக்க வேண்டும் என்பதுதான் லட்சியம்.  இப்படி நல்லவனாக்குகிற நிலையங்களாக ஆலயங்களும், ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம்  போலவே,  இவைகளை விடவும் அவசியம் இருக்கத்தான் வேண்டும்.
Related Posts with Thumbnails